கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உ.செல்லூரில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள், பெற்றோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பள்ளி ஆசிரியர்கள் அடிக்கடி விடுப்பு எடுப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பள்ளி நுழைவாயிலில் சிறு பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.